திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு 31. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை கிறிஸ்து ஆண்டு கி.பி + 31 திருவள்ளுவர் ஆண்டு. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: நாயனார் முதற்பாவலர் நான்முகனார் செந்நா போதார் தேவர் தெய்வப்புலவர் மாதானுபங்கி பெருநாவலர் பொய்யில் புலவர் திருக்குறளின் வேறு பெயர்கள்: முப்பால் தெய்வநூல் உத்திர வேதம் பொய்யாமொழி தமிழ்மறை திருவள்ளுவம் வாயுறை வாழ்த்து பொதுமறை திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. இந்த நூல் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுறையில் பரிமேலழகர் உரையே சிறந்தது. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்: தருமர் தாமத்தர் பரிதி திருமலையர் பரிப்பெருமாள் மணக்குடவர் நச்சர் பரிமேலழகர் மல்லர் காளிங்கர் விக்டோரியா மகாராணி கண்விழித்தும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள் த...