Skip to main content

திருக்குறளின் முக்கிய அம்சங்கள் மற்றும் தகவல்கள் – அறிந்து கொள்ள வேண்டியவை | TNPSC

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

இவரது காலம் கி.மு 31. 

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை கிறிஸ்து ஆண்டு கி.பி + 31 திருவள்ளுவர் ஆண்டு.

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: 
  • நாயனார் 
  • முதற்பாவலர் 
  • நான்முகனார் 
  • செந்நா போதார் 
  • தேவர் 
  • தெய்வப்புலவர் 
  • மாதானுபங்கி 
  • பெருநாவலர் 
  • பொய்யில் புலவர்

திருக்குறளின் வேறு பெயர்கள்:
  • முப்பால் 
  • தெய்வநூல் 
  • உத்திர வேதம் 
  • பொய்யாமொழி 
  • தமிழ்மறை 
  • திருவள்ளுவம் 
  • வாயுறை வாழ்த்து 
  • பொதுமறை

திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. இந்த நூல் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுறையில் பரிமேலழகர் உரையே சிறந்தது. 

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்: 
  • தருமர் 
  • தாமத்தர் 
  • பரிதி 
  • திருமலையர் 
  • பரிப்பெருமாள் 
  • மணக்குடவர் 
  • நச்சர் 
  • பரிமேலழகர் 
  • மல்லர் 
  • காளிங்கர் 

விக்டோரியா மகாராணி கண்விழித்தும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள்

திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. 

அதிகாரங்கள் 133 குறள் பாடல்கள் 1330 

திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளைக் கொண்டது.

  • அறத்துப்பால் 38 அதிகாரம் 
  • பொருட் பால் 70 அதிகாரம் 
  • காமத்துப்பால் 25 அதிகாரம் 
என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.

திருக்குறளை ஜி.யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர்.

தமிழ்ச் சான்றோர் பலரால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை திருக்குறளின் பெருமையை போற்றி புகழ்கிறது. 

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்றும் இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தை என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளை போற்றி புகழ்ந்துள்ளார். 

மலையத்துவன் மகன் ஞானப்பிரகாசம் 1812 ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.

வீரமாமுனிவர் திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்துள்ளார். 

உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்லின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது. 

இங்கிலாந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு தைத்திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.


Comments

Popular posts from this blog

📘 புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் – TNPSC, TRB தேர்வுக்குத் தேவையான குறிப்புகள்!

  🔹 1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் கனிச்சாறு கொய்யாக்கனி பாவியக்கொத்து நூறாசிரியம் பள்ளிப்பறவைகள் எண்சுவை எண்பது உலகியல் நூறு மகுபுகு வஞ்சி 🔹 2. முடியரசன் பூங்கொடி வீரகாவியம் காவியப்பாவை புதியதொரு விதி செய்வோம் ஊன்றுகோல் 🔹 3. S. ராமகிருஷ்ணன் உபபாண்டவம் கதாவிலாசம் தேசாந்திரி கால் முளைத்த கதைகள் தாவரங்களின் உரையாடல் உலகின் மிகச் சிறிய தவளை 🔹 4. ரா. பி. சேதுப்பிள்ளை தமிழின்பம் ஆற்றங்கரையினிலே கடற்கரையினிலே தமிழ் விருந்து தமிழகம் ஊரும் பேரும் மேடைப்பேச்சு 🔹 5. வி. முனிசாமி (திருக்குறளார்) வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் காட்டிய வழி திருக்குறளில் நகைச்சுவை திருக்குறள் உரை விளக்கம் சிந்தனை களஞ்சியம் 🔹 6. சுப்ரபாரதிமணியன் பின்னல் வேட்டை தண்ணீர் யுத்தம் கதை சொல்லும் கலை 🔹 7. காளமேகப்புலவர் (வரதன்) திருவானைக்காவலுலா சரஸ்வதி மாலை பரப்பிரம்ம விளக்கம் சித்திர மடல் தனிப்பாடல் திரட்டு 🔹 8. பாவண்ணன் வேர்கள் தொலைவில் இருக்கின்றன நேற்று வாழ்ந்தவர்கள்...

TNPSC Study Notes: இந்தியாவின் “முதல்” சாதனைகள் | அரசியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  ✅ அரசியல் மற்றும் ஆட்சி : இந்தியாவின் முதல் சாதனைகள் 🏛️ அரசியல் முன்னோடிகள் இந்தியாவின் முதல் ஜனாதிபதி: டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1950) முதல் துணை ஜனாதிபதி: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1952) முதல் பிரதமர்: ஜவகர்லால் நேரு (1947) சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர்-ஜெனரல்: லார்டு மவுண்ட்பேட்டன் (1947) முதல் இந்திய ஆளுநர்-ஜெனரல்: சி. ராஜகோபாலாச்சாரி (1948) முதல் தலைமை நீதிபதி: ஹரிலால் ஜே. கனியா (1950) முதல் தலைமைத் தேர்தல் ஆணையர்: சுகுமார் சேன் (1950) முதல் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்: சி.டி. தேஷ்முக் (1943) ஹிந்தியில் ஐ.நா.வில் உரையாற்றிய முதல் பாராளுமன்ற உறுப்பினர்: அடல் பிகாரி வாஜ்பாய் (1977) முதல் துணை பிரதமர்: சர்தார் வல்லபாய் பட்டேல் (1947) இந்திய சிவில் சேவையில் சேர்ந்த முதல் இந்தியர்: சத்யேந்திரநாத் தாகூர் (1863) 🔬 அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதல் சாதனைகள் 🚀 விண்வெளி மற்றும் தொழில்நுட்பம் முதல் செயற்கைக்கோள்: ஆர்யபட்டா (1975) விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்: ராகேஷ் சர்மா (1984) முதல் செ...